தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த சூப்பர் ஸ்டார் இயக்குனர் பாலச்சந்திரால் அறிமுகப்படுத்தப்பட்டார் . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்ரஜினிகாந்த் .
தற்போது 72 வயதாகியும் கூட இன்னும் அவருடைய மார்க்கெட் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதையடுத்து தற்போது மூன்று படங்களில் நடிப்பதற்கு,
ஒப்பந்தம் ஆகியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலேயே அதிக சொத்து மதிப்பு உள்ள ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மட்டும் தான். அப்படி 430 கோடி சொத்து இருந்தும் சந்தோஷம் இல்லை என்று வெளிப்படையாக,
கூறியுள்ளார் ரஜினிகாந்த் . அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் ரசிகர் ஒருவர் , நீங்கள் நடிக்க வராமல் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் .? என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சூப்பர் ஸ்டார், நான் நடிக்க வராமல் இருந்திருந்தால்,
கண்டிப்பாக டிராபிக் கண்ட்ரோலராக இருந்திருப்பேன் . அப்படி மட்டும் நான் இருந்திருந்தால் இப்போது ஒரு நடிகனாக அனுபவிக்கும் சந்தோஷத்தை விட இன்னும் அதிகமான சந்தோஷத்தை அனுபவித்திருப்பேன் என்று கூறியிருந்தார்…