இயக்குனர் அட்லீ தற்போது இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராக மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வந்த அட்லீ ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி ,மெர்சல் , பிகில் என்று தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் படங்களை ,
கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் இயக்குனர் அட்லீ . இப்படி தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்த இயக்குனர் அட்லீ ஹிந்தி சினிமாவிற்கு சென்று நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி இருந்தார் . சமீபத்தில் வெளியான,
இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. குறிப்பாக இந்த திரைப்படம் 19 நாட்களில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது . மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்த இயக்குனரின் படமும் ஆயிரம் கோடி வசூல் செய்தது கிடையாது.
இயக்குனர் அட்லீ தான் அந்த சாதனையை முதல் முதலில் செய்திருக்கிறார் . மேலும் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் அட்லீ யின் குருவான இயக்குனர் ஷங்கராலையே இந்த சாதனையை செய்ய முடியவில்லை . அப்படி இருக்கும்போது ஷங்கரின் சிஷ்யன் ,
இப்படி ஒரு பிரம்மாண்ட சாதனையை செய்துள்ளதை தமிழ் சினிமாவே அண்ணாந்து பார்க்கிறது . அது மட்டுமல்லாமல் இயக்குனர் அட்லீ அடுத்ததாக ஹாலிவுட் படங்களில் பணிபுரிய போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது…