சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓர் மூத்த முன்னணி நட்சத்திரம் ஆவார் . இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் குறிப்பாக சூப்பர் ஸ்டார் . இவர் அவ்வளவு சீக்கிரம் ஒருவரை பாராட்ட மாட்டார் . அப்படி ஒருவரை பாராட்டினால் அவர்கள் உச்சத்திற்கு சென்று விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் சூப்பர் ஸ்டாரின் வாய் முகூர்த்தம் அப்படியே பலிக்குமாம் . அந்த வகையில்,
ராகவா லாரன்ஸ் குரூப் டான்ஸராக இருக்கும்போது அவருடைய நடனத் திறமையை பார்த்து வருங்காலத்தில் பெரிய நடன கலைஞராக வருவார் என்று கூறியிருக்கிறார் . அதேபோலவே ராகவா லாரன்ஸும் தன்னுடைய நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திருந்தார் .இவரை தொடர்ந்து,
இயக்குனராகும் ஆசையில் வந்த பார்த்திபனை நடிகராக கண்டுபிடித்ததும் சூப்பர் ஸ்டார் தானாம் . அது மட்டுமல்லாமல் ஜோதிகாவின் வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனை நடந்து இருக்கிறது . அந்த திரைப்படம் தான் சந்திரமுகி . பி வாசு இயக்கத்தில் உருவான இந்த படத்தில்,
சந்திரமுகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜோதிகா . அப்படி இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஜோதிகா நன்றாக நடிப்பாரா என்ற சந்தேகம் சூப்பர் ஸ்டாருக்கு இருந்ததாம் . பின்னர் ஜோதிகாவை வைத்து ஒரு குளோசப் ஷாட் எடுக்கும் போது அவருடைய கண்ணை பார்த்ததும்,
கண்டிப்பாக சந்திரமுகி சூப்பர் ஹிட் அடிக்கும் என்றும் , ஜோதிகா இந்த படத்திற்காக பெரிய அளவில் பேசப்படுவார் என்றும் கூறினாராம் . அப்படி அவர் சொன்னது போலவே இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது மட்டுமில்லாமல் ஜோதிகாவுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது…