தமிழ் சினிமா உலகில் இருக்கும் ஒரு சில நடிகர்கள் சினிமாவைத் தாண்டி மக்களுக்கு பல நல்ல விஷயங்களையும் செய்து வருகின்றனர் . அந்த வகையில் சூர்யா , ராகவா லாரன்ஸ் போன்ற நடிகர்கள் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் பல ஏழை எளியோருக்கு உதவி செய்து வருகின்றனர் . இப்படி தமிழ் சினிமா உலகில் இவர்கள் இருவரும் உதவி செய்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் .
ஆனால் நடிகர் அஜித்தும் ஒரு அறக்கட்டளை நடத்தி வருவது யாருக்குமே தெரியாத ஒன்று . அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்து வருபவர் நடிகர் அஜித். அது மட்டுமில்லாமல் கடந்த பத்து வருடங்களாக தன்னுடைய படத்தின்,
பிரமோஷனுக்கு கூட கலந்து கொள்வதில்லை அஜித். இப்படி இருக்கும் நிலையில் விளம்பரம் தேடாமல் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறாராம் நடிகர் அஜித் . அந்த வகையில் மோனிகா – மணி பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை பல வருடங்களாக நடத்தி வருகிறாராம்,
நடிகர் அஜித் . மேலும் இப்படி உதவி செய்வதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று அஜித் உறுதியாக கூறிவிட்டாராம். அது மட்டுமல்லாமல் நடிகர் ஜெய்சங்கரின் மகனான விஜய் சங்கர் பிரபல கண் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார் . அவர் மூலமாகவும் அஜித் ஒரு சில பேருக்கு,
உதவி செய்து வருகிறாராம் . இதை பார்த்த ரசிகர்கள் தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு சாப்பாடு வாங்கி கொடுத்தாலே அதை போட்டோ எடுத்து பப்ளிசிட்டி தேடும் மனிதர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மனிதரா என்று கூறி வருகின்றனர்…