April 23, 2024

ஒரு காலத்தில் எப்படி இருந்த நடிகர் ..?? இணையத்தை கலக்கும் “டாப் ஸ்டார்” பிரசாந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் பிரசாந்த் . இயக்குனரும்,  நடிகருமான தியாகராஜனின் ஒரே மகனான பிரசாந்த் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதனால் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார் பிரசாந்த் .

அப்படி இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த செம்பருத்தி, ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் ,ஜோடி, ஆசையில் ஒரு கடிதம், பிரியாத வரம் வேண்டும், தமிழ் ,வின்னர் போன்ற பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . குறிப்பாக அப்போது காதல் படங்களுக்கு ,

அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார் பிரசாந்த் . இதனாலேயே  பெண்கள் மத்தியிலும் பெரிய அளவில் பிரபலமடைந்தார் பிரசாந்த் . ஆனால் இதன் பிறகு ஆக்சன் படங்களை தேர்வு செய்து தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார் பிரசாந்த் . இதனால் இவர் நடித்த எந்த திரைப்படங்களும்,

பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதை அடுத்து தற்போது பல வருடங்கள் இடைவெளிக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர்  பிரசாந்த் . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய ,

லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஒரு காலத்தில் எப்படி இருந்த நடிகர் என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *