நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்து வரும் விஜய் இன்னும் ஒரு படத்தை முடித்த கையோடு முழுநேர அரசியலில் களமிறங்குவார் என்று தகவல் வெளியானது . மேலும் விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்தாலும் ,
அவருக்கு பாராட்டுகளை விட விமர்சனங்கள் தான் குவிந்த வண்ணம் இருக்கிறது .இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும் விஜய் அடுத்தடுத்து முதல்வன் அர்ஜுன் போல பல விஷயங்களை செய்ய உள்ளாராம் . அந்த வகையில் விரைவில் மக்களோடு மக்களாக இணைந்து ,
அவர்களுடைய நிறை குறைகளை நேரில் கேட்டறிந்து அதன் பிறகு தன்னுடைய கட்சியின் கொள்கையை வெளியிட உள்ளாராம் . அதோடு தமிழ்நாடு முழுக்க நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறாராம் விஜய் . இதனால் சாதாரண வசதி கூட இல்லாத பல கிராமங்களுக்கு சென்று,
அங்குள்ள மக்களின் தேவைகளை எளிதில் நிறைவேற்ற முடியும் என்ற நோக்கத்தில் விஜய் இதை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பத்திரிகையாளர்கள் என்று சொன்னாலே அரசியல்வாதிகள் கொஞ்சம் தயங்குவார்கள். ஆனால் நடிகர் விஜய் எப்போது ,
வேண்டுமானாலும் பேட்டி கொடுப்பதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறாராம். அப்படி இதுவரை எந்த அரசியல்வாதிகளும் செய்யாததை செய்து மக்களின் வாக்கை பெற இருக்கிறாராம் விஜய்…