தமிழ் சினிமாவை பொறுத்தவரை வசூலில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டாரின் படங்கள் தான் . அப்படி பல வருடமாக வசூல் சாதனை செய்து வருகிறது சூப்பர் ஸ்டாரின் படங்கள் . ஆனால் சமீப காலமாக இவருடைய நடிப்பில் வெளியான தர்பார் , அண்ணாத்த போன்ற திரைப்படங்கள் மோசமான வரவேற்பையே பெற்றது . இந்த காரணத்தினால் ஜெயிலர் படத்தை பெரிய அளவில் நம்பி இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் .
அப்படி அவர் நம்பியது போலவே இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து சிவராஜ்குமார் ,மோகன்லால் ,ஜாக்கிசரப், விநாயகன், சுனில், ரம்யா கிருஷ்ணன் ,வசந்த் ரவி ,
யோகி பாபு , மிர்னா மேனன் , ரெடின் கிங்ஸ்லி போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் . இப்படி வெளியான படத்தை அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் ,
இந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் படத்தை மிஞ்ச உள்ளதாம். அப்படி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் , கார்த்தி , ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய் , திரிஷா போன்ற பல பிரபலங்களின் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மொத்தமாகவே 500 கோடி தான் வசூலித்திருந்தது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 9 நாட்களிலேயே 440 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இதனால் இன்னும் சில நாட்களில் பொன்னியின் செல்வன் படத்தை ஜெயிலர் திரைப்படம் ஓரங்கட்டி விடும் என்று கூறப்படுகிறது…