நயன்தாரா ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட முன்னணி நடிகை ஆவார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தில் கலக்கி கொண்டு வரும் நயன்தாரா தான் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார் . அப்படி ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா அந்த படத்தில் நடிப்பதற்கு ஏகப்பட்ட கண்டிஷன்களை போடுவாராம் .
அது மட்டுமல்லாமல் சமீபத்தில் 50 வினாடி விளம்பரத்தில் நடிப்பதற்காக ஐந்து கோடி சம்பளம் கேட்டாராம் நடிகை நயன்தாரா. அதோடு தான் நடிக்கும் ப்ரோமோசன் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ள மாட்டாராம் நடிகை நயன்தாரா . இப்படி மார்க்கெட் உள்ளது என்று ஓவராக ஆடி வந்த,
நயன்தாராவின் ஆணவத்தை அடக்கியுள்ளார் பிரபல நடிகை ஒருவர். அவர் வேறு யாரும் இல்லை நடிகை திரிஷா தான். ஆரம்பத்தில் இருந்தே நயன்தாராவுக்கு சக போட்டியாளராக இருந்து வரும் திரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு உச்சத்தில் இருந்து வருகிறார் ,
என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் தற்போது விஜய்யுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி, கமலுடன் ஒரு படம் என்று மொத்தம் 7 படங்களில் கமிட்டாகி உள்ளாராம் நடிகை திரிஷா . மேலும் கமலுடன் நடிப்பதற்கு திரிஷாவுக்கு 12 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம் .
அப்படி பார்த்தால் இனி தமிழ் சினிமா உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை திரிஷா மட்டும் தானாம் . அதன் பிறகு நம்பர் ஒன் நடிகை பட்டமும் இவருக்கு சென்று விடும் என்று கூறப்படுகிறது…