குஷ்பூ ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான குஷ்பூ இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குனர் சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை குஷ்பூ. திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .
மேலும் திருமணத்துக்கு பிறகும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் என்று கலக்கிக் கொண்டு வந்த குஷ்பூ தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து வருகிறார் .இதை வைத்து தான் தற்போது குஷ்பூவை பலரும் கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர் . அதற்கு காரணம்,
என்னவென்றால் சமீபத்தில் மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடுமையான சம்பவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதற்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரும் குரல் கொடுத்தனர். எல்லோரையும் போல குஷ்பூவும் பொதுவாக இதற்கு ,
ஒரு பதிவை போட்டு இருந்தார் . ஆனால் அதன் பிறகு இவர் கண்டுகொள்ளவில்லை . இதுதான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . காரணம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து வரும் குஷ்பூவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அப்படி இருந்து கொண்டும் ,
அந்த கொடுமைகளுக்கு எதிராக குஷ்பு வாய் திறக்காமல் இருப்பதை தான் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன ர் . அப்படி இந்தியாவையே உலுக்கிய மணிப்பூர் சம்பவத்தை பற்றி ஆளும் கட்சியில் இருந்து கொண்டே பேச தைரியம் இல்லாமல் இருந்து வருகிறார் நடிகை குஷ்பூ…