பப்லு பிரித்திவிராஜ் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி சீரியல் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு வந்த பப்லு பிரித்திவிராஜ் ஒரு கட்டத்தில் வளர்ந்த பிறகு ஹீரோ,வில்லன் , குணச்சித்திர நடிகர் என்று கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்துக்கொண்டு வந்தார். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ,
தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கடந்த 1994 ஆம் ஆண்டு பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். திருமணமான இவர்களுக்கு 28 வயதில்,
ஒரு மகனும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் கடந்த வருடம் முதல் மனைவியை பிரிந்த பப்லு பிரித்திவிராஜ் ஷீத்தல் என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் . திருமணமாகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிந்ததாக ,
தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் பப்லு பிரித்திவிராஜால் அவருடைய இளம் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லை . இதனால் தான் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று சர்ச்சையை கிளப்பினார் . இதற்கு பதிலடி கொடுத்த ,
பப்லு பிரித்திவிராஜ், என்னால் 40 பெண்களை திருப்தி படுத்த முடியும் , எனக்கு இதெல்லாம் காலை உணவு சாப்பிடுவது போல என்று பச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் …