May 8, 2024

இனிமேல் யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை..!! அதிரடி முடிவெடுத்த நடிகர் விஜய் ..!! அப்போ இனி சிங்க பாதை தானா ..??

தற்போது இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான லியோ படத்தில் நடித்து முடித்து விட்டார் நடிகர் விஜய்.  இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது . ஆனால் நடிகர் விஜய்க்கு எப்போதும் போல இந்த முறையும் ஒரு சில விஷமிகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் . அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ லான்சை  நேரு ஸ்டேடியத்தில்,

பிரம்மாண்டமாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் லியோ படத்தின் தயாரிப்பளர். ஆனால் இதற்காக பர்மிஷன் கேட்க போகும் போது விஜய்யின் மேனேஜரும் , லியோ படத்தின் தயாரிப்பாளரும் தெனாவட்டாக பேசியதால் கடுப்பான கமிஷனர் இவர்களை பல மணி நேரம் ,

காக்க வைத்திருந்தாராம் . இதை கேட்ட நடிகர் விஜய் இனிமேல் நாம் யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.  இனிமேல் என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் , நான் எல்லாத்துக்கும் தயாராக தான் இருக்கிறேன் என்று கூறி விட்டாராம் . இதனால் தான் லியோ படத்தின் ,

ஆடியோ லான்ச் நிறுத்தப்பட்டாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் நடிகர் விஜய் ஸ்டாலினிடம் இது குறித்து பேசினால் கண்டிப்பாக எல்லா பிரச்சனையும் சுமுகமாக முடிந்து விடும்.  ஆனால் நடிகர் விஜய் இனிமேல் யாரிடமும் நிற்கப் போவதில்லை என்று அதிரடி முடிவெடுத்து,

விட்டாராம் . இதனால் இப்போதே தெரிகிறது நடிகர் விஜய் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார் என்று , இப்படி நடக்கும் விஷயங்களால் கண்டிப்பாக விஜய் அரசியலில் களமிறங்கி பதிலடி கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *