தமிழ் சினிமாவை கலக்கி ஒரு முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிம்பு . இயக்குனரும், நடிகருமான டி ராஜேந்தரின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்து இன்று தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக கலக்கிக் கொண்டு வருகிறார் . மேலும் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான மாநாடு , வெந்து தணிந்தது காடு , பத்து தல போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இதைஅடுத்து கமல் தயாரிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிய பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சிம்பு . மேலும் 40 வயதாகவும் சிம்பு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
குறிப்பாக சிம்பு என்றால் வம்பு என்று சொல்வது போல நயன்தாரா , ஹன்சிகா போன்ற பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார் நடிகர் சிம்பு . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம் . அப்படி கடந்த சில வருடங்களாகவே சிம்புவுக்கு,
கல்யாணம், சிம்புவுக்கு கல்யாணம் என்ற தகவல்கள் வெளியானதே தவிர கல்யாணம் நடந்தபாடில்லை . ஆனால் தற்போது உண்மையிலேயே சிம்புவுக்கு கல்யாணம் நடக்க உள்ளதாம். அந்த வகையில் ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகளைத்தான் ,
நடிகர் சிம்பு விரைவில் திருமணம் செய்த கொள்ளப் போகிறாராம் . இந்த அறிவிப்பை அவரே வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை பார்த்த சிம்பு ரசிகர்கள் தற்போது செம குஷியில் இருந்து வருகின்றனர் …