நடிகரும் , இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகளான மீரா கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இவரின் திடீர் மரணம் திரைப்பிரபலங்கள் உட்பட எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது . குறிப்பாக விஜய் ஆண்டனி போன்ற ஒரு தந்தை இருக்கும்போது எப்படி இவருக்கு தற்கொலை செய்ய மனசு வந்தது என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர் .
ஏற்கனவே விபத்தில் பாதி உடைந்து போன நடிகர் விஜய் ஆண்டனி மகளின் மரணத்தால் மேலும் துன்பத்திற்கு ஆளானார் . இதன் பிறகு மகளோடு தானும் இறந்து விட்டதாக ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார் நடிகர் விஜய் ஆண்டனி . இப்படி இருக்கும் நிலையில்,
மகளின் இறப்பிற்குப் பிறகு வெளியே வந்திருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி. அந்த வகையில் இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் ரத்தம் . இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்புக்கு தன்னுடைய ,
இளைய மகளுடன் வந்திருந்தார் நடிகர் விஜய் ஆண்டனி. அப்படி அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி , இனி என்னுடைய மகளை விட்டு நான் பிரிந்து இருக்கவே மாட்டேன் என்று உருக்கமாக பேசியிருந்தார் . தற்போது அவருடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்,
வெளியாகி வைரலாகி வருகிறது . இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுடைய மகள் எப்போதும் உங்களுடன் தான் இருப்பார் என்று விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் வார்த்தை கூறிவருகின்றனர் …