தமிழ் சினிமா உலகில் எம்.ஜி.ஆருக்கு பிறகு வாரி வழங்குவதில் வள்ளல் என்று பெயர் எடுத்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். என்னதான் பிறப்பால் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளையாக பிறந்தாலும் , கேப்டன் விஜயகாந்திடம் இருக்கும் நல்ல மனசு யாருக்கும் வராது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் இவர் ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் நுழைவதற்கு,
பல கஷ்டங்களையும், ஏமாற்றங்களையும் சந்தித்திருக்கிறார் . அது மட்டுமல்லாமல் அப்போது ஒருவேளை சோற்றுக்கே மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார் விஜயகாந்த் . இதனாலயே தன்னைப் போல பிறர் கஷ்டப்படக் கூடாது என்று தன்னுடைய படத்தில் பணிபுரியும் ,
அத்தனை நபர்களுக்கும் கறி சோறு போட்டு அவர்களின் நெஞ்சை குளிர வைத்தார் விஜயகாந்த். இந்த முறையை முதன் முதலில் கொண்டு வந்தது விஜயகாந்த் தானாம் . குறிப்பாக எப்போதுமே கேப்டன் விஜயகாந்த் சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் குறைய வைக்க மாட்டாராம் .
மேலும் அவரோடு நடித்திருந்த பல பிரபலங்கள் தற்போது 300 கோடி , 400 கோடி என்று சொத்து வைத்திருக்கின்றனர். ஆனால் விஜயகாந்தின் தற்போதைய சொத்து மதிப்பு 53 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது . மேலும் இவர் சொத்து சேர்க்க வேண்டும் என்று,
நினைத்திருந்தால் இதைவிட அதிக சொத்து இருந்திருக்கும் . இருந்தாலும் அவர் தன்னைவிட மக்களுக்கே அதிகம் செலவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…