வடிவேலு ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார் . கடந்த 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானார் வடிவேலு . குறிப்பாக இந்த திரைப்படத்தில் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்ததே நடிகர் ராஜ்கிரண் தான் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சின்ன கவுண்டர் படத்தில் வாய்ப்பு கொடுத்து இருந்தார் விஜயகாந்த்.
இதன்பிறகு தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் வடிவேலு. என்னதான் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும் இவருடைய நிஜ குணம் பல பேரை கலங்க வைத்திருக்கிறது . இன்னும் சொல்லபோனால் ஏற்றி விட்ட ,
ஏணியையே எட்டி உதைக்கும் அளவிற்கு மோசமான குணம் கொண்டவராக இருந்துள்ளார் வடிவேலு . அப்படி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு வடிவேலு போகாததால் பல பேர் இவர் மீது சரியான கோபத்தில் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்தை,
தொடர்ந்து ராஜ்கிரணையும் மதிக்காமல் மட்டமாக நடந்து கொண்டிருக்கிறார் வடிவேலு . அந்த வகையில் சமீபத்தில் நடந்த கலைஞர் 100 விழாவில் எல்லா பிரபலங்களும் கலந்து கொண்டனர். அப்படி அந்த நிகழ்ச்சிக்காக பிரபலங்களை அழைத்து செல்வதற்கு பேட்டரி கார்களை ஏற்பாடு செய்துள்ளார்கள்.
ஆனால் அப்போது தெரியவில்லை வடிவேலுக்கு ராஜ்கிரணுடன் தான் நாம் செல்வோம் என்று . உடனே காரை நிறுத்த சொல்லி டிரைவருக்கு அருகில் அமர்ந்து சென்று இருக்கிறார் வடிவேலு . இன்னும் சொல்லப்போனால் ராஜ்கிரணை நிமிர்ந்து கூட பார்க்கவில்லையாம் …