April 29, 2024

ரஜினியை தொடர்ந்து பாபாஜியிடம் சரணடைந்த தமிழ் நடிகை ..!! பாபாஜி தான் இவரை அழைத்தாரா ..?? நடிகையே வெளியிட்ட பதிவு ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாபாஜியின் தீவிர பக்தர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இதனால் அடிக்கடி பாபாஜியின் குகைக்கு சென்று வருவார் நடிகர் ரஜினிகாந்த் . அப்படி சமீபத்தில் கூட இமய மலைக்கு சென்று இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இப்படி இருக்கும் நிலையில் இவரை போல பாபாஜியிடம் சரணடைந்துள்ளார் பிரபல இளம் நடிகை ஒருவர் .

அவர் வேறு யாருமில்லை நடிகை ஆத்மிகா தான்.  கடந்த 2017 ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஆத்மிகா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ,

கோடியில் ஒருவன், வைபவ் நடிப்பில் வெளியான  காட்டேரி , உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே , அருள் நிதி நடிப்பில் வெளியான திருவின் குரல் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஆத்மிகா . இந்நிலையில் சமீபத்தில் பாபாஜியின் குகைக்கு,

சென்று இருந்த ஆத்மிகா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்,  அதில் , இந்த பயணம் ஆன்மாவின் அழைப்பு என்பதை நான் உணர்ந்தேன். எனக்கு ஒரு தெய்வீக அழைப்பு வந்தது ,அதனால் எதைப்பற்றியும் யோசிக்காமல் கிளம்பி விட்டேன் .

அப்படி பாபாஜி குகையில் தியானத்தில் அமர்ந்த போது அதுபோன்ற சக்தியை நான் இதற்கு முன்பு உணர்ந்ததே கிடையாது . இந்த தியானம் என்னுடைய பார்வையையே மாற்றி விட்டதாக உணர்கிறேன் என்று கூறியிருந்தார் நடிகை ஆத்மிகா…

 

 

View this post on Instagram

 

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *