பொதுவாகவே சினிமாவை பொறுத்தவரை நடிகர்களை விட நடிகைகளுக்கு சம்பளம் குறைவு தான். அப்படி நடிகர்கள் 100 கோடி 150 கோடி என்று சம்பளம் வாங்கி வரும் நிலையில் நடிகைகளுக்கு 10 கோடி கொடுத்தாலே பெரிய விஷயமாக பேசப்படுகிறது . அப்படி இருக்கும் போது ஒரு நிமிஷத்துக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கி அனைவரையும் ஆச்சி ரியப்பட வைத்துள்ளார் ஒரு நடிகை. அவர் வேறு யாருமில்லை ,
நடிகை ஊர்வசி ரவுடேலா தான். ஹிந்தி படத்தின் மூலம் தன்னுடைய திரையை பயணத்தை தொடங்கிய நடிகை ஊர்வசி ரவுடேலா தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார் . அது மட்டுமல்லாமல் கடந்த வருடம் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிப்பில் வெளியான,
தி லெஜன்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஊர்வசி ரவுடேலா . மேலும் இவர் தமிழ்,தெலுங்கு, பெங்காலி , ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் கலக்கி கொண்டு வருகிறார். அதோடு இவர் சமீப காலமாக பெரிய நடிகர்களின்,
படங்களில் மாசான குத்தாட்டத்தையும் போட்டு வருகிறார் . அப்படி அந்த குத்தாட்டம் போடுவதற்காக ஒரு நிமிஷத்துக்கு ஒரு கோடி சம்பளம் கேட்கிறாராம் நடிகை ஊர்வசி ரவுடேலா . அப்படி பார்த்தால் நான்கு நிமிட பாடலுக்கு நாலு கோடி சம்பளம் வாங்குகிறாராம்.
குறிப்பாக தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகைகளான நயன்தாரா, சமந்தாவுக்கு கூட இவ்வளவு சம்பளம் கிடைக்கவில்லை. இந்த வருமானத்தில் தான் தற்போது 190 கோடி மதிப்பில் பிரம்மாண்ட சொகுசு பங்களா வாங்கியிருக்கிறாராம் நடிகை ஊர்வசி ரவுடேலா…