எஸ் வி சேகர் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர், நாடகக் கலைஞர் மற்றும் இயக்குனர் ஆவார் . கடந்த 1980 ஆம் ஆண்டு இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வறுமையின் நிறம் சிவப்பு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் எஸ்வி சேகர். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு, பயணங்கள் முடிவதில்லை ,டௌரி கல்யாணம் ,
பூவே பூச்சூடவா , சிதம்பர ரகசியம் , திருமதி ஒரு வெகுமதி , கதாநாயகன் , பொண்டாட்டி யே தெய்வம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் எஸ் வி சேகர் . ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் குணசித்திர கதாபாத்திரத்தில்,
கலக்கி கொண்டு வந்த எஸ் வி சேகர் ஒரு கட்டத்தில் தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார் . அது மட்டுமல்லாமல் இவர் கிருஷ்ணா கிருஷ்ணா என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில்,
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் எஸ் வி சேகர் கூறியதாவது எனக்கும் ரஜினிக்கும் ஒரே வயது தான் . ஆனால் அவருடைய ரூட் வேற , என்னுடைய ரூட் வேற . மேலும் நான் செய்த சாதனையை அவரால் செய்யக்கூட முடியாது . அந்த வகையில் நான் உலகம் முழுவதும்,
7000 டிராமா நிகழ்ச்சி பண்ணியிருக்கிறேன் . இப்ப இருக்கிற எந்த நடிகர் நினைத்தாலும் அப்படி செய்யவே முடியாது , அதுதான் எனக்கு கிடைத்த பாக்கியம் என்று கூறியிருந்தார் நடிகர் எஸ்வி சேகர்…