April 27, 2024

மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட ” வாரணம் ஆயிரம் ” பட நடிகை ..!! இப்போது தான் நான் நானாக இருக்கிறேன் ..!! அப்போ அதெல்லாம் மேக்கப்பா ..??

தமிழ் சினிமா உலகில் கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வாரணம் ஆயிரம்.  இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்  தான் நடிகை சமீரா ரெட்டி . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகை சமீரா ரெட்டி.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான அசல் ,விஷால் நடிப்பில் வெளியான வெடி ,ஆர்யா நடிப்பில் வெளியான வேட்டை போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார் நடிகை சமீரா ரெட்டி .  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் ,

கன்னடம் , பெங்காலி மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை  சமீரா ரெட்டிக்கு ஒரு மகன்,  ஒரு மகள் உள்ளனர் . குறிப்பாக திருமணத்துக்கு பிறகு நடிப்பதையே,

நிறுத்திக் கொண்டார் நடிகை சமீரா ரெட்டி.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சமீரா ரெட்டி தன்னுடைய பழைய கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அதில் பேடு பிராஸ் ,கண்ணுக்கு கலர் லென்ஸ் ,மேக்கப் போட்டு ,

அழகான புகைப்படங்கள் எடுக்க இருந்தது.  ஆனால் இப்போது அப்படி இல்லை, நான் நானாக இருக்கிறேன் , எனக்கு எந்த ஒரு மன அழுத்தமும் இல்லை என்று மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை சமீரா ரெட்டி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *