தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் அசோக் செல்வன். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் அசோக் செல்வன். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெகிடி, 144, கூட்டத்தில் ஒருத்தன் , ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள் ,நித்தம் ஒருவானம் என்று தொடர்ச்சியாக வித்தியாசமான கதைக்களங்களை,
தேர்வு செய்து நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகர் அசோக் செல்வன் . இன்னும் சொல்ல போனால் இவர் தேர்வு செய்யும் கதை களத்திற்காகவே இவரை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதுவும் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம்,
பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது. இதனிடையே ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது சக நடிகையான கீர்த்தி பாண்டியன் மீது காதல் வயப்பட்டார் நடிகர் அசோக் செல்வன். அந்த வகையில் கீர்த்தி பாண்டியன் வேறு யாருமில்லை 90 களில் ,
தமிழ் சினிமாவை கலக்கிவந்த நடிகர் அருண் பாண்டியனின் மகள் தான். இவர் தும்பா மற்றும் அன்பிற்கினியாள் போன்ற படங்களில் நடித்திரு க்கிறார் நடிகை கீர்த்தி பாண்டியன் . இப்படி இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய காதலியை கரம் பிடித்து விட்டார் நடிகர் அசோக் செல்வன்.
அவர்களுடைய திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அசோக் செல்வனுக்கும் கீர்த்தி பாண்டியனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…