தமிழ் திரை உலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்து இன்று ஒரு தவிர்க்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார். அண்மை காலமாக இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது . இன்னும் சொல்ல போனால்,
சிவகார்த்திகேயனை ரசிகர்கள் நம்ம வீட்டு பிள்ளை போலவே நினைத்தனர். ஆனால் இப்படி நல்ல பெயருடன் இருந்து வந்த சிவகார்த்திகேயனின் பெயர் ஒரே நாளில் தலைகீழாக மாறியது . காரணம் டி இமான் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை,
செய்து விட்டார் என்று பரபரப்பை கிளப்பியிருந்தார் . குறிப்பாக சிவகார்த்திகேயனும், டி இமானின் மனைவியும் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் தகவல்கள் கசிந்தது . ஆனால் இது குறித்து தற்போது வரை எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்து வந்தார் சிவகார்த்திகேயன் .
இதனால் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ளாமல் இருந்துவந்தார் நடிகர் சிவகார்த்திகேயன் . இப்படி இருக்கும் நிலையில் சர்ச்சைக்கு பிறகு முதல் முறையாக சிவகார்த்திகேயன் தற்போது வெளியில் தலைகாட்டியுள்ளார் . அந்த வகையில் நேற்று நடந்த
கமல்ஹாசனின் 69 வது பிறந்தநாள் பாட்டிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன் . தற்போது அந்த புகைப்படம் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…