April 27, 2024

10 வருடம் கழித்து “அதற்கு” ஓகே சொல்லிய திரிஷா ..!! இதை சொல்வதற்கு இத்தனை வருஷமா ..?? செம குஷியில் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட்  நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை திரிஷா.  மாடல் அழகியாக இருந்து வந்த திரிஷா மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  பின்னர்  இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வந்தார் நடிகை திரிஷா . பின்னர் மார்க்கெட் இல்லாமல் இருந்து வந்த திரிஷாவுக்கு ,

பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.  இதைத்தொடர்ந்து தற்போது நாலு திரைப்படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் நடிகர் திரிஷா.  இப்படி இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 10 வருடம் கழித்து அதற்கு ஓகே சொல்லி விட்டாராம் நடிகை திரிஷா.

அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கிய தெலுங்கு  திரைப்படம் தான் ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே.  இந்த படத்தில் தெலுங்கு நடிகரான வெங்கடேஷ், திரிஷா, ஸ்ரீ காந்த், கே விஸ்வநாத் ,கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ,சுனில் போன்ற ,

பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . பின்னர் இதே படத்தை தமிழில் தனுஷை  வைத்து யாரடி நீ மோகினி என்று ரீமேக் செய்திருந்தார்கள்.  இந்நிலையில் இந்த படம் வெளியாகி பதினாறு ஆண்டுகள் ஆன நிலையில் ,

கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு தயார் என்று பதிவிட்டு இருந்தார் செல்வராகவன்.  அந்தப் பதிவுக்கு பத்து வருடங்கள் கழித்து “நான் ரெடி” என்று பதிலளித்திருக்கிறார் நடிகை திரிஷா . இதனால் திரிஷாவின் ரசிகர்கள் செம குஷியில் இருந்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *