தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் . மெரினா என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கி சிவகார்த்திகேயன் தற்போது வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்,
பிரபல நடிகை ஒருவர் . அவர் வேறு யாரும் இல்லை நடிகை கீர்த்தி சுரேஷ் தான். கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தில் பிடித்துக் கொண்டார் .
அதுவும் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது எல்லாம் வென்றார் நடிகை கீர்த்தி சுரேஷ் . இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ஆரம்ப கால சினிமா குறித்தும் பேசி இருந்தார் . அதில், ஆரம்பத்தில் இவர் நடித்த பெரும்பாலான ,
திரைப்படங்கள் தோல்வியையே சந்தித்ததாம் . இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தார்களாம் . இந்த காரணத்தினால் ராசி இல்லாத நடிகை என்ற நிலைக்கு தள்ளப்பட்டாராம் நடிகை கீர்த்தி சுரேஷ் . அப்போது தன்னுடைய சினிமா வாழ்க்கையே முடிந்து விட்டது ,
என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷ்சுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தாராம் . இதன் பிறகு தான் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கி க்கொண்டு வந்தாராம் நடிகை கீர்த்தி சுரேஷ்…