May 7, 2024

அஜித்துக்கு இதை பார்த்தால் அலர்ஜியா ..?? இதனால் தான் கேப்டன் விஜயகாந்தின் இறப்பில் கலந்துக்கொள்ளவில்லையா..??

கடந்த மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்து விட்டார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . மேலும் பல வருடங்களாக உடல் நலக்குறைவால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த விஜயகாந்தின் திடீர் இறப்பு தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும்.  மேலும் விஜயகாந்த் வாழும்போதே வள்ளலாக வாழ்ந்து வந்ததால் இவருடைய இறுதி அஞ்சலிக்கு கிட்டத்தட்ட ,

பதினாறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் . இதுதான் இவர் சேர்த்து வைத்த சொத்தாக கருதப்படுகிறது . மேலும் இவருடைய மரண செய்தியை கேட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ,தளபதி விஜய் , கவுண்டமணி போன்ற பல பிரபலங்கள் ,

நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.  இப்படி இருந்த நிலையில் நடிகர் அஜித் விஜயகாந்தின் இறுதி அஞ்சலிக்கு வரவில்லை என்று அவருடைய ரசிகர்களே கொந்தளித்தார்கள்.  மேலும் ஆரம்ப காலகட்டங்களில் அஜித்துக்கும் ஒரு பக்க பலமாக இருந்திருக்கிறார் விஜயகாந்த்.

இதனால் பகல் நேரத்தில் வந்தால் ரசிகர்கள் சூழ்ந்து விடுவார்கள் என்பதால் மதியம் மூணு மணிக்கு வருவதற்கு விஜயகாந்தின் குடும்பத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறார் அஜித் . குறிப்பாக அஜித்துக்கு கூட்டம் என்றால் அலர்ஜியாம் . இதனாலேயே  இப்படி ஒரு கோரிக்கையை,

வைத்திருக்கிறார். ஆனால் துக்கத்தில் இருந்த விஜயகாந்தின் குடும்பத்தினர் இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லையாம் . இதனால் அஜித்தும் வரவில்லை என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *