May 2, 2024

500 படங்களுக்கு மேல் நடித்து என்ன பிரோஜனம் ..!! ஒரு விருது கூட வாங்காத 72 வயது நடிகர் ..!! ஊறுகாய் போல பயன்படுத்தப்பட்ட பிரபலம் ..!!

தமிழ் சினிமாவில் எத்தனையோ திறமையான நடிகர்கள் உள்ளனர் . ஆனால் அந்த திறமையான நடிகர்களுக்கெல்லாம் சரியான அங்கீகாரம் கிடைத்ததா என்று கேட்டால் அது சந்தேகம் என்று தான் சொல்ல வேண்டும்.  அப்படி 500 படங்களுக்கு மேல் நடித்தும் இதுவரை ஒரு விருது கூட வாங்காமல் இருந்திருக்கிறார் ஒரு நடிகர் . அவர் வேறு யாருமில்லை காமெடி நடிகர் செந்தில் தான் . கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான,

ஒரு கையில் இரு தீபங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் செந்தில் . இப்படி ஆரம்பத்தில் சோலோவாக நடித்து வந்த செந்தில் ஒரு கட்டத்தில் கவுண்டமணியுடன் கூட்டணி சேர்ந்தார் . இதன் பிறகு தான் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகர் செந்தில் .அதுவும்,

கவுண்டமணியும்,  செந்திலும் நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது.  குறிப்பாக கவுண்ட மணியும்  செந்திலும் இணைந்து  200 படங்களுக்கு மேல் ஒன்றாக நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி கவுண்டமணியுடன் நடிக்கும் போது,

பிரபலமாக இருந்த செந்தில் தனியாக நடிக்கும் போது அவருடைய காமெடி பெரிய அளவில் எடுபடவில்லை.  இதன் பிறகு கிடைக்கும் வேடங்க ளில் நடித்துக் கொண்டு வந்தார் செந்தில்.  அப்படி இவருடைய 44 வருட சினிமா வாழ்க்கையில் 500 படங்களுக்கு மேல் நடித்து அசத்தியிருக்கிறா ராம்.

ஆனால் இதுவரை இவர் நடிப்பிற்காக ஒரு விருது கூட வாங்கியது கிடையாதாம் . குறிப்பாக ஆரம்பத்தில் இருந்தே  ஊறுகாய் போல தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார் செந்தில்.  இருந்தாலும் இன்றும் இவருக்கு இருக்கும் பெயர் அப்படியே தான் இருக்கிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *