May 3, 2024

என்ன பார்த்தா உங்களுக்கு அப்படியா தெரியுது ..?? எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி கேட்பிங்க ..?? கேட்க கூடாத கேள்வியால் கொந்தளித்த சினேகா ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை சினேகா.  கடந்த 2000ம் ஆண்டு வெளியான என்னவளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா அவருக்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சினேகா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம் ,உன்னை நினைத்து, புன்னகை தேசம், விரும்புகிறேன் ,வசூல்ராஜா எம்பிபிஎஸ், பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் போன்ற,

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை சினேகா.  குறிப்பாக அப்போது இவரின் சிரிப்பில் மயங்காத ரசிகர்களே கிடையாது.  இதனால் புன்னகை அரசி என்றும் அழைக்கப்பட்டு வந்தார் சினேகா.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல்,

தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் கலங்கி கொண்டு வந்தார். இதனிடையே பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட சினேகாவுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில்  சினேகாவிடம் நீங்கள் ஹீரோக்களுக்கு அக்கா மாதிரி இருக்கீங்க ,

இதற்கு மேல் உங்களுடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பேட்டி ஒன்றில் கேட்டிருக்கிறார் தொகுப்பாளர்.  இதைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த சினேகா,  எவ்வளவு தைரியம் இருந்தால் நீங்கள் இப்படி கேட்பீர்கள்.?  நான் என்ன ஹீரோக்களுக்கு அக்கா மாதிரியா இருக்கேன்.

புதுப்பேட்டைஅந்த மாதிரி கதாபாத்திரமாக இருந்தாலும் கூட ரசிகர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள் . மேலும் நான் 41 வயதிலும் ஃபிட்டாக தான் இருக்கிறேன் என்னால் கதாநாயகியாகவும் நடிக்க முடியும் என்று தரமான பதிலடி கொடுத்திருந்தார் நடிகை சினேகா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *