கே பி ஒய் பாலா ஓர் பிரபலமான விஜய் டிவி பிரபலம் ஆவார் . கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான பாலா தொடர்ந்து குக் வித் கோமாளி ,மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் . இப்படி சின்னத்திரையில் கலக்கி கொண்டு வந்த பாலா,
வெள்ளித்திரையில் வெளியான ஜூங்கா ,புலிக்குத்தி பாண்டி ,நாய் சேகர், ரன் பேபி ரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . இப்படி குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் முன்னணி நடிகர்களே செய்யாத விஷயங்களை செய்து ரசிகர்களின் மனதை கவர்ந்து,
வருகிறார் கே பி ஒய் பாலா . அந்த வகையில் சமீபத்தில் தான் மலைவாழ் மக்களுக்காக இரண்டு புதிய ஆம்புலன்ஸ் களை வாங்கி கொடுத்திருந்தார் பாலா . இதை எஅடுத்து தற்போது மூன்றாவது முறையாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ள பாலா தாமரைக்கரை என்ற,
கிராமத்தில் வசிக்கும் விவசாய குடும்பங்களுக்கு போதுமான உபகரணங்கள் இல்லை என்பதை தெரிந்து கொண்டு தற்போது மூன்று லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை வாங்கி கொடுத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பாலாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…