May 3, 2024

சூர்யா , கார்த்தியே கொடுக்கும் போது ..!! இவர் சும்மா இருப்பாரா ..?? சென்னை மக்களுக்கு அள்ளிக்கொடுத்த அமீர் ..!!

கடந்த ஒரு மாதமாகவே பருத்திவீரன் பஞ்சாயத்து தான் பெரிய அளவில் போய்க்கொண்டிருக்கிறது.  மேலும் இன்று தவிர்க்க முடியாத நடிகர்களாக இருந்து வரும் சூர்யா,  கார்த்திக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குனர் அமீர் அவர்கள்.  இன்னும் சொல்லப்போனால் பருத்திவீரன் என்ற திரைப்படம் வரவில்லை என்றால் கார்த்தி இந்த அளவிற்கு வந்திருப்பாரா.?

என்பது சந்தேகம்தான் . அந்த நன்றி கூட இல்லாமல் அமீரை ஒதுக்கியுள்ளனர் சூர்யா மற்றும் கார்த்தி . அதோடு தற்போது அமீருக்கு தான் பிரபலங்கள் அனைவரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் சென்னை மக்களுக்காக சூர்யாவும் கார்த்தியும்,

சேர்ந்து 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியிருந்தனர் . இவர்களைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் அமீரும் 10 லட்சம் ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் . தற்போது அந்த புகைப்படம் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *