சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதைத்தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் கமிட் ஆகியிருக்கிறார் ரஜினிகாந்த் . அந்த வகையில் தற்போது ரஜினியின் 171 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் ,
இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் சமீபத்தில் வெளியானது . ஆனால் இந்த அறிவிப்பு தான் தற்போது கமலுக்கு மிகப்பெரிய மனஸ்தாபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஜெயிலர் படத்திற்கு முன்பே லோகேஷ் கனகராஜ் ரஜினி படத்தை,
இயக்குவதாக இருந்தார் . அந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பதாக முடிவு எடுத்தார் . பின்னர் ரஜினி , லோகேஷ் இருவரும் பிசியானதால் இந்தப் படம் அப்படியே தள்ளி போனது . இப்படி இருக்கும் நிலையில் தற்போது ரஜினியின் 161 வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்,
கைப்பற்றி உள்ளது . மேலும் ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜுக்கும் கேட்டதை விட அதிக சம்பளம் கொடுப்பதற்கு தயாராக உள்ளாராம் கலாநிதி மாறன் . இதனால் வேறு வழி இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,
மற்றும் லோகேஷ் கனகராஜ் இதற்கு ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த அறிவிப்பால் நம்ப வைத்து இப்படி ஏமாற்றி விட்டார்களே என்று புலம்பி வருகிறாராம் கமல்ஹாசன்…