May 8, 2024

நல் ல மதிப் பெ ண் எடுத் தால் மட்டு ம் போ தாது..!! இது வும் தெ ரிய வே ண்டு ம் ..!! விஜய் யை தா க்கி பேசி ய சூ ர் யா ..!! வைர லா கும் த க வல் இ தோ ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் விஜய் மற்றும் சூர்யா . ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . இதன்பிறகு தங்களுக்குரிய பாணியில் கதையை தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில்,

முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து சான்றிதழ்களையும்,  ஊக்க தொகையும் வழங்கி இருந்தார் . அப்படி அந்த விழாவில் மொத்தம் 1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியிருந்தார் நடிகர் விஜய் . குறிப்பாக நடிகர் விஜய் இந்த விஷயத்தை அரசியலுக்கு வருவதற்காக தான் செய்தார்,

என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது . இப்படி இருக்கும் நிலையில் விஜய்யை தாக்கி  பேசி யுள்ளார் நடிகர் சூர்யா . அந்த வகையில்  அகரம் அறக்கட்டளை என்ற ஒன்றைத் தொடங்கி தற்போது வரை பல ஏழை எளிய மாணவர்களை படிக்க வைத்து வருகிறார் நடிகர் சூர்யா. இந்நிலையில் ,இந்த ஆண்டு பெற்றோரை இழந்த,

மாணவ , மாணவிகளுக்கு மேற்படிப்புக்கு உண்டான உதவி தொகையை  வழங்கியிருந்தார்  சூர்யா . அப்போது பேசிய சூர்யா கூறியதாவது , நல்ல மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதாது . அந்தக் கல்வி மூலம் வாழ்க்கையை தெரிந்து கொள்ளுங்கள் . வாழ்க்கையில் கல்வி தான் ஒரு முக்கியமான ஒன்று.  மேலும் நாங்கள் முதலிடம் பிடித்த ,

மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அந்த மாணவ , மாணவிகளின் வீட்டு சூழ்நிலையை பொறுத்து தான் உதவுகிறோம் என்றும் பேசியிருந்தார் நடிகர் சூர்யா . இதைப் பார்த்த பலரும் 1500  மாணவர்களுக்கு மட்டும் ஊக்கத்தொகை கொடுத்த விஜய்யை சூர்யா தாக்கி பேசியுள்ளார் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *