அசோக் செல்வன் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய அசோக் செல்வன் இந்த படத்தை தொடர்ந்து தெகிடி, 144, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே தன்னுடன் நடித்திருந்த ,
நடிகை கீர்த்தி பாண்டியன் மீது காதல் வயப்பட்ட அசோக் செல்வன் சமீபத்தில் அவரையே கரம் பிடித்தார் . மேலும் கீர்த்தி பாண்டியன் நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவார் . இவருக்கு கோடிக்கணக்கில் சொத்து உள்ளது . இதைப் பார்த்த பலரும் அவரிடம் கோடிக்கணக்கில் சொத்து,
உள்ளது அதனால்தான் அவரை திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறி வந்தனர். இன்னும் சில அசோக் செல்வனின் ரசிகைகள் எங்க கிட்ட இல்லாதது அவகிட்ட அப்படி என்ன இருக்கு என்று மோசமாக விமர்சித்தனர் . இதற்கெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு நடந்த பேட்டியிலேயே,
பதிலை கூறிவிட்டார் அசோக்செல்வன் . அதாவது தனக்கு வரப்போற மனைவி இப்படித்தான் இருப்பேன், இங்கு தான் சாப்பிடுவேன் என்று சீன் போடாமல் மிகவும் சாதாரணமான வாழ்க்கை வாழ தெரிந்திருக்க வேண்டும். அப்படி ஒரு பெண்ணை தான் நான் மனைவியாக எதிர்பார்க்கிறேன் ,
என்று கூறியிருந்தார் . அப்படி அவர் கூறியது போலவே பெரிய நடிகரின் மகளாக இருந்தாலும் கீர்த்தி பாண்டியன் விளம்பரம் தேடியதில்லை. அது மட்டுமல்லாமல் இவர் அவர்களுடைய சொந்த நிலத்தில் விவசாயமும் செய்து இருக்கிறார் . இதனால் தான் இவரை கரம் பிடித்தார் என்று கூறப்படுகிறது…