அஞ்சலி தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக் கொண்டு வருகிறார் . கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை அஞ்சலி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அங்காடி தெரு, தூங்கா நகரம் ,மங்காத்தா, எங்கேயும் எப்போதும் ,கலகலப்பு ,சிங்கம் 2 ,இறைவி ,தரமணி ,
நாடோடிகள் 2 பேரன்பு போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை அஞ்சலி . அதுவும் நடிக்க வந்த புதிதில் ரசிகர்களின் கனவுக் கன் னியாகவும் இருந்து வந்தார் நடிகை அஞ்சலி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும்,
தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் சமீப காலமாக இவருக்கு தமிழில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை . இதனால் மற்ற மொழி படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நடிகை அஞ்சலி . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ,
நடிகை அஞ்சலி முத்த காட்சியில் நடித்தது குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார் . அந்த வகையில் எனக்கு நெருக்கமான காட்சிகளை படமாக்கும் போது மிகவும் கடினமாக இருக்கும் . அதுவும் முத்த காட்சிகளை எடுக்கும் போது கேரவனுக்குள் ஓடி விடுவேன் . அங்கு தேம்பி தேம்பி அழுவேன். இதன் பிறகு தான் ஷாட்டுக்கு,
நான் தயா ராகுவேன். ஆனால் லிப் லாக் காட்சியில் நடிக்கும் போது ஒரு எல்லைக்கு மேல் போகக்கூடாது என்று தெரியும் , இருந்தாலும் எல்லோரும் முன்னாடியும் அப்படி நடிப்பது தான் பிரச்சனை என்று அந்த பேட்டியில் வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகை அஞ்சலி …