தமிழ் சினிமா உலகில் மூத்த முன்னணி இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்து வருபவர் இசைஞானி இளையராஜா அவர்கள். அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய இளையராஜா இதுவரை ஆயிரம் படத்திற்கு மேல் இசையமைத்து சாதனை படைத்திருக்கிறார். இப்படி தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்த இளையராஜா அவ்வப்போது தன்னுடைய ஆணவ பேச்சால்,
ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்து இருக்கிறார். மேலும் வாய் தான் இவருக்கு கொஞ்சம் அதிகம். ஆனால் அந்த விஷயத்தில் ராஜா ராஜா தான் . அந்த வகையில் சமீபத்தில் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி ஈ சிஆரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஒரு சில குளறுபடிகளால்,
பல ரசிகர்கள் ஆயிர கணக்கில் கொடுத்து டிக்கெட் வாங்கியும் அந்த நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர் . இது தெரிந்தும் ஏ ஆர் ரகுமான் கண்டுகொள்ளாமல் இசை நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் . ஆனால் இளையராஜா இதுவரை தமிழ்நாடு உட்பட பல இடங்களில்,
இசைக்கச்சேரி நடத்தி இருக்கிறார். அப்படி இத்தனை முறை நடத்தியும்கூட இது போன்று ஒரு பிரச்சனை கூட நடந்ததே கிடையாதாம் . காரணம் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பே பல கண்டிஷன்களை போட்டு விடுவாராம் இளையராஜா. குறிப்பாக ஏதாவது பிரச்சனை என்று காதுக்கு வந்தால்,
உடனே அந்த நிகழ்ச்சியை நிறுத்தியும் விடுவாராம். காரணம் பணம் கொடுத்து பார்க்கும் ரசிகர்கள் நிம்மதியாக பார்க்க வேண்டும் என்று அந்த விஷயத்தில் உறுதியாக நிற்பாராம் இளையராஜா. இதைப் பார்த்த ரசிகர்கள் என்னதான் இருந்தாலும் ராஜா ராஜா தான் என்று கூறி வருகின்றனர்…