தமிழ் தொலைக்காட்சிகளிலேயே டிஆர் பியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சியில் மட்டும்தான். அப்படி இந்த தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது . அப்படி ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் சீரியல் . இந்த சீரியல் ஹிட்டானதற்கு முக்கிய காரணமே,
ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாரிமுத்து தான் . இவருக்காகவே இந்த சீரியலை ரசிகர்கள் விரும்பி பார்த்து வந்தனர் . இப்படி இருந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் ரசிகர்களை புரட்டி போட்டது . இப்போதுவரை இவர் இறந்து விட்டார் என்பதை ,
யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . ஆனால் இந்த துக்கத்திலும் டிஆர்பிக்காக அலைந்து இருக்கிறது எதிர்நீச்சல் சீரியல் குழு . அந்த வகையில் மாரிமுத்து இறந்த அன்றைக்கே அடுத்த குணசேகரன் யார் என்று பெரிய கேள்வி நிலவி வந்தது.
இதனால் அப்பவே நடிகர் வேல ராமமூர்த்திக்கு போன் செய்து விட்டார்களாம் எதிர்நீச்சல் சீரியல் குழு. ஆனால் நடிகர் வேல ராமமூர்த்தி தற்போது படங்களில் பிசியாக நடித்து வருவதால் இந்த சீரியலில் அவர் நடிப்பதற்கு வாய்ப்பு கொஞ்சம் கம்மி தான் என்று கூறப்படுகிறது .
இருந்தாலும் மாரிமுத்து இறந்து இரண்டு மணி நேரத்தில் டி ஆர் பிக்காக எதிர்நீச்சல் சீரியல் குழு இப்படி ஒரு மட்டமான வேலையை பார்த்தது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது…