April 26, 2024

தமிழில் இருந்து ஒரு நடிகை..!! ஹிந்தியில் இருந்து ஒரு நடிகை..!! சிம்புவுக்காக இரண்டு நடிகைகளை களத்தில் இறக்கிய கமல் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிம்பு . ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே  தன்னுடைய நடிப்பாலும் , நடனத்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்த சிம்பு மாநாடு படத்தின் மூலம் தரமான ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு,  பத்து தல போன்ற படங்கள் ,

நல்ல வரவேற்பை பெற்று இருந்தது . இதை அடுத்து தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ள புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சிம்பு . இந்த படத்தை,

உலக நாயகன் கமல்ஹாசன் தான் தயாரிக்கிறார்.  மேலும் வரலாற்று கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தத் திரைப்படம் பாகுபலி படத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக ,

தமிழில் இருந்து ஒரு நடிகையும் , பாலிவுட்டில் இருந்து ஒரு நடிகையையும் இறக்கி இருக்கிறாராம்  கமல் . அவர்கள் வேறு யாருமில்லை பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் மற்றும் தமிழ் நடிகையான கீர்த்தி சுரேஷ் தான் . இவர்கள் இருவருமே இந்த படத்தில் ,

கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இதனால் கண்டிப்பாக இந்தப் படமும் பான் இந்தியா அளவில் தான் ரிலீஸ் ஆகும் என்று தமிழ் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *