90 களின் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் தான் பெப்சி உமா. அப்படி பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான பெப்சி உமாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது . இன்னும் சொல்லப்போனால் அப்போது பெப்சி உமா பல பேருக்கு கனவு கன்னியாகவும் இருந்து வந்தார் .
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஒரே நிகழ்ச்சியில் இருந்து வந்த பெப்சி உமா பின்னர் இதை எல்லாம் விட்டு விலகி விட்டார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்று பேசிய பெப்சி உமா , தனக்கு வந்த பட வாய்ப்புகள் குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார் .
அந்த வகையில் சல்மான் கான், ஷாருக்கான் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது, அதை நிராகரித்து விட்டேன். அதோடு மூத்த இயக்குனர்களான கே பாலச்சந்தர் , பாரதிராஜா போன்றவர்களின் படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்தது . ஆனால் முடியாது என்று,
மறுத்துவிட்டேன். அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இரண்டு முறை நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. ஆனால் நான் முடியாது என்று மறுத்து விட்டேன் . இதற்கு காரணம் எனக்கு நடிப்பில் சுத்தமாக ஆர்வமே கிடையாது . அப்படி இருக்கும்போது,
என்னால் எப்படி நடிக்க முடியும் . அதனால் தான் இந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்து விட்டேன் என்று கூறியிருந்தார் தொகுப்பாளினி பெப்சி உமா…