தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக இருந்து வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ என்ற அப்டத்தில் நடித்து முடித்துள்ளார் . இதைத்தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வேனக்ட் பிரபு இயக்க உள்ள புதிய பதில் நடிக்க இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில்,
அரசியலில் களமிறங்குவதற்காக பல வேலைகளை செய்து வருகிறார் நடிகர் விஜய் . அப்படி அடுத்த கட்ட அரசியல் நகர்விற்காக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ , மாணவிகளை நேரில் சந்தித்து பரிசும், உதவி தொகையும்,
வழங்கி இருந்தார் நடிகர் விஜய் . இந்நிலையில் நேற்று விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி கூட்டம் நடைபெற்றது . இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் . அப்போது ஒரு பெண் நான் நடிகர் விஜயின் தீவிர ரசிகை என்று கூறியிருந்தார் . உடனே விஜய் மக்கள்,
இயக்கத்தின் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தலைவனை அப்படியெல்லாம் கூப்பிடக்கூடாது, இனிமேல் தளபதின்னு மட்டும் தான் கூப்பிடனும் என்று கூறியிருந்தார் . இந்த விஷயம் நேற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் ,
இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை அதற்குள் இவ்வளவு அலப்பறையா என்றும் இந்த அல்லக்கைகளின் அலப்பறைய தாங்க முடியல என்றும் கூறி வருகின்றனர் . இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …