April 24, 2024

ஸ்ரீதேவியை நான் தான் கொன்று விட்டேன்..!! 5 வருடங்கள் கழித்து உண்மையை சொல்லிய போனி கபூர் ..!! அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!!

80 , 90-  காலகட்டங்களில் இந்திய சினிமாவையே கலக்கி கொண்டு வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்த ஸ்ரீதேவி மூன்று முடிச்சு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து 16 வயதினிலே ,சிகப்பு ரோஜாக்கள் ,கல்யாணராமன், ஜானி ,வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இதனிடையே ஹிந்தி தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து விட்டார் நடிகை ஸ்ரீதேவி .

இந்நிலையில் அவர் இறந்து 5 வருடம் ஆன நிலையில் , அவருடைய இறப்பு குறித்து உண்மையை கூறியுள்ளார் போனி கபூர்.  அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போனி கபூர் கூறியதாவது,  என்னுடைய மனைவியான ஸ்ரீதேவியை நான் தான் கொன்று விட்டேன் என்று பலரும்,

வாய்ப்புகள் பேசினார்கள் . இத்தனை ஆண்டுகளாக இதையெல்லாம் பேசாமல் அமைதியாக இருந்தேன்.  மேலும் துபாயில் என்னுடைய மனைவி இறந்தபோது 48 மணி நேரம் என்னிடம் விசாரணை நடத்தினார்கள் . அதோடு உண்மையை கண்டறியும் சோதனையையும் நடத்தினார்கள் .

அந்த நேரத்தில் நான் பட்ட வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும் . பின்னர் அந்த விசாரணையில் இது திட்டமிட்ட கொலையல்ல எதிர்பாராத மரணம் என்று முடிவு செய்த பிறகுதான் இந்தியாவிற்கு ஸ்ரீதேவியின் உடலை கொடுத்தார்கள் என்று வேதனையுடன் கூறியிருந்தார் போனி கபூர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *