April 29, 2024

ஆமா , எனக்கு அது தேவைப்படுது ..!! உங்களுக்கு என்ன பிரச்சனை ..!! ஓப்பனாக பேசிய பப்லு பிரித்விராஜ்..!!

பப்லு பிரித்விராஜ் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் சீரியல் நடிகர் ஆவார்.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டு வந்த பப்லு பிரித்விராஜ் ஒரு கட்டத்தில் கதாநாயகனாகவும் ,வில்லனாகவும் ,குணசித்திர நடிகராகவும் கலக்கிக் கொண்டு வந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் .

இப்படி சினிமாவில் கலக்கி கொண்டு வந்த பப்லு பிரித்விராஜ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மர்மதேசம் ,ரமணி vs ரமணி, கோகுலத்தில் சீதை ,வாணி ராணி , போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார் .இதனிடையே பீனா என்பவரை திருமணம் செய்து கொண்ட பப்லு பிரித்விராஜ்க்கு ,

28 வயதில் ஒரு மகனும் இருக்கிறார் . இதன் பிறகு முதல் மனைவியை பிரிந்த பப்லு பிரித்விராஜ் கடந்த வருடம் சீட்டல் என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றெல்லாம் சர்ச்சைகள் கிளம்பியது .

இந்த வயதில் இளம் பெண்ணுடன் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் செக்ஸாக தான் இருக்க முடியும் என்று பத்திரிகையாளர் ஒருவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார் .இதுகுறித்து பப்லு கூறியதாவது , ஆமா ,எனக்கு அது தேவைப்படுகிறது.

எனக்கு அது பிரேக் பாஸ்ட் சாப்பிடற மாதிரி . இப்பவும் தினமும் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.  அதற்கான சக்தியை எனக்கு ஆண்டவன் கொடுத்திருக்கிறார் ,உங்களுக்கு என்ன பிரச்சனை என்று ஓப்பனாக  பேசியிருந்தார் பப்லு பிரித்விராஜ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *