90ஸ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கௌசல்யா . கடந்த 1997 ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கௌசல்யா. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நேருக்கு நேர், பிரியமுடன் ,சொல்லாமலே ,பூவேலி ,ஆசையில் ஒரு கடிதம் ,ராஜகாளியம்மன், மனதை திருடி விட்டாய் ,
போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் நடிகை கௌசல்யா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி இருந்த ,
நடிகை கௌசல்யா தற்போது மீண்டும் படங்களிலும் சீரியல்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் 43 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நடிகை கௌசல்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாவது , நான் ஒன்றும் திருமணத்தை,
எதிர்ப்பவள் கிடையாது . கல்யாணம் என்பது ஒரு அழகான விஷயம். என்னுடைய கருத்துக்கும் எனக்கும் பிடித்தமான ஒருவர் கிடைக்கவில்லை. அப்படி ஒருவர் என்னுடைய வாழ்க்கையில் இருந்தார். ஆனால் இப்போது நாங்கள் பிரிந்து விட்டோம். குறிப்பாக மனசுக்கு பிடித்த யாரும்,
என்னுடன் கடைசி வரை வருவார்கள் என்ற நம்பிக்கையை யாரும் எனக்கு தரவில்லை . இதனால் தான் திருமணம் செய்து கொள்ளாமல் என்னுடைய பெற்றோர்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன் என்று கூறியிருந்தார் நடிகை கௌசல்யா…