அஜித் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார் . சத்தமே இல்லாமல் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் அஜித் துணிவு படத்திற்கு பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க இருந்த விடாமுயற்சி என்ற படத்தில் கமிட்டானார்.லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . ஆனால் இப்போது வரை இந்த திரைப்படம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.
இன்னும் சொல்லப்போனால் இந்த திரைப்படம் கைவிடப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் நயன்தாரா விட்ட சாபம் என்று தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் துணிவு பணத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருந்தார் நடிகர் அஜித்.அதற்கான அறிவுப்பும் ,
வெளியாகி இருந்தது . ஆனால் கடைசி நேரத்தில் கதை பிடிக்கவில்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவனை தூக்கி விட்டார் அஜித். இதனால் அதன் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு எந்த ஒரு படமும் அமையவில்லை . இப்படி இருக்கும் நிலையில் விடாமுயற்சி படமும் கைவிடும் நிலையில் தான் உள்ளது .
அப்படி மட்டும் நடந்தால் இயக்குனர் மகிழ் திருமேனிக் கு விக்னேஷ் சிவனின் நிலைமை தான் இவருக்கும் வரும் என்று கூறப்படுகிறது. ஆனால் நடிகர் அஜித் அப்படிப்பட்டவர் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . ஆனால் சமீப காலமாக அவரை வேறு யாரோ ஒருவர் தவறாக வழிநடத்துகிறார்கள்,
என்றும் கூறப்படுகிறது . இதனால் விடாமுயற்சி திரைப்படம் உருவாகுமா என்பது விரைவில் தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது. மற்ற நடிகர்களின் படம் வரிசையாக வெளியாகும்போது அஜித்தின் படம் மட்டும் இன்னும் தொடங்கவே இல்லை என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது…