80, 90களில் நடிகை சில்க் ஸ்மிதாவை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி வண்டி சக்கரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சில்க் ஸ்மிதா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத நடிகையாக கொடி கட்டி பறந்து வந்தார். அது மட்டுமல்லாமல் இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் தவிர்க்க முடியாத நடிகையாக,
கலக்கி கொண்டு வந்தார் . அதுவும் ஒரு கட்டத்தில் இவர் இல்லாத படங்களே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு பிஸியான நடிகையாக இருந்து வந்தார் நடிகை சில்க் ஸ்மிதா . ஆனால் கடந்த 1996 ஆம் ஆண்டு திடீரென தன்னுடைய வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்,
நடிகை சில்க் ஸ்மிதா. இவருடைய மரணம் இன்று வரை ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகை சில்க் ஸ்மிதாவின் இறுதி சடங்கில் ஒரே ஒரு தமிழ் நடிகர் மட்டும்தான் கலந்து கொண்டாராம் . வேறு எந்த நடிகரும் கலந்து கொள்ள வில்லையாம். அவர்தான் நடிகர் அர்ஜுன்.
அந்த வகையில் சில்க் ஸ்மிதா அர்ஜுன் உடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . அப்படி ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது அர்ஜுனிடம் , நான் செத்துப் போனால் என்னுடைய சாவுக்கு நீ வருவியா என்று விளையாட்டாக கேட்டாராம் நடிகை சில்க் ஸ்மிதா . உடனே அதிர்ச்சியான ,
அர்ஜுன் என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க என்று சொன்னாராம் . ஆனால் நடிகை சில்க் ஸ்மிதா இப்படி சொல்லி சில நாட்களிலேயே தற்கொலை செய்து கொண்டாராம். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான நடிகர் அர்ஜுன் நடிகை சில்க் ஸ்மிதாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டாராம்…