சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவை கலக்கி வரும் உச்ச நடிகர் ஆவார். இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்த சூப்பர் ஸ்டாருக்கு கடந்த சில வருடங்களாக வெளியான எந்த ஒரு திரைப்படங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . இதனால் ஜெயிலர் திரைப்படத்தை மலை போல் நம்பி இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . அப்படி இயக்குனர் நெல்சன்,
இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார் ,மோகன்லால் ,விநாயகன், ஜாக்கி சரப் , ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி ,யோகி பாபு , மிர்னா மேனன் என்று பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர் . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ,
அனிருத் இசையமைத்திருந்தார் . அப்படி கடந்த பத்தாம் தேதி வெளியான இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது . குறிப்பாக இந்த திரைப்படம் இதுவரை 600 கோடி வசூலை தொட்டதாக தகவல் வெளியாகி உள்ளது . மேலும் ஜெயிலர் திரைப்படம் தமிழ் மொழி மட்டுமல்லாமல்,
மற்ற மாநிலங்களிலும் சக்கை போடு போட்டு வருகிறது. இப்படி தங்களுடைய நிறுவனத்துக்கு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த ரஜினிக்கு செக் ஒன்றை கொடுத்திருக்கிறார் கலாநிதி மாறன். ஆனால் சூப்பர் ஸ்டாருக்கு கலாநிதி மாறன் எத்தனை கோடி செக் கொடுத்தார் என்று மட்டும் தெரியவில்லை .
ஆனால் இதற்கு முன்பு எந்திரன் படத்தின் வெற்றியின் போது கலாநிதி மாறன் இரண்டு கோடி ரூபாய் சூப்பர் ஸ்டாருக்கு செக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பல கோடி செக் போட்டு கொடுத்திருப்பார் என்றும் கூறப்படுகிறது…