April 27, 2024

தம்பி தம்பின்னு சொல்லி சிம்புக்கு ஆப்பு வைத்த பிரபலம் ..!! கோடிக்கணக்கில் தண்டம் கட்டும் சிம்பு ..!! இதெல்லாம் இவருக்கு தேவை தானா ..??

தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் சிம்பு . மேலும் பல வருடங்களாக சிம்புவின் படங்கள் தொடர் தோல்வியையே சந்தித்து வந்தது . ஆனால் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் சிம்புவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது  என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி இருக்கும் நிலையில் சிம்புவை தம்பி தம்பி என்று சொல்லி பெரிய ஆப்பாக ,

வைத்திருக்கிறார் பிரபலம் ஒருவர்.  அவர் வேறு யாரும் இல்லை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தான்.  தமிழில் வெளியான தேவி ,போகன், எல்கேஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன் போன்ற பல திரைப்படங்களை தயாரித்திருந்த ஐசரி கணேஷ் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை தயாரித்திருந்தார்.

இந்த திரைப்படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இதைத் தொடர்ந்து மீண்டும் சிம்புவை வைத்து கொரோனா குமார் என்ற படத்தை எடுக்க இருந்தார் ஐசரி கணேஷ் . இந்த படத்திற்காக நாலரை கோடி சிம்புவுக்கு கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர் . ஆனால் சிம்பு எப்போதும் போல இந்தப் படத்திலும்,

நடிக்காமல் டிமிக்கி கொடுத்திருக்கிறார் . இதனால் கோபமடைந்த ஐசரி கணேஷ் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார் . ஆனால் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை . பின்னர்  அண்ணன் தம்பிக்குள் நடக்கும் சாதாரண பிரச்சனை தான் என்றும் பேட்டி கொடுத்திருந்தார் . இந்  நிலையில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து,

தற்போது கோர்ட் வரை சென்றுள்ளது.  இதனால் சிம்புவுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . என்னதான் சிம்பு மீது தவறு இருந்தாலும் தம்பி தம்பி என்று சொல்லி ஐசரி கணேஷ் இப்படி ஏமாற்றி விட்டாரே என்று சிம்புவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *