தமிழ் சினிமா உலகில் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தனி ஒருவன் . ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்த இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து அரவிந்த்சாமி ,நயன்தாரா ,கணேஷ் வெங்கட்ராமன் ,ஹரிஸ் உத்தமன் ,ஸ்ரீ சரண் , ராகுல் மாதவ் ,நாசர், தம்பி ராமையா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார் .
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும் . குறிப்பாக ஜெயம் ரவியின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக இருக்கிறது தனி ஒருவன் திரைப்படம் . மேலும் இந்த படம் பல மொழிகளில் ரீ மேக் செய்யப்பட்டது . குறிப்பாக இந்த படத்தின்,
வெற்றிக்கு முக்கிய காரணமே அந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் அரவிந்த்சாமி தான் . அந்த அளவிற்கு தன்னுடைய வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தார் நடிகர் அரவிந்த்சாமி . இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்க,
உள்ளாராம் இயக்குனர் மோகன் ராஜா . அப்படி முதல் பாகத்தை தயாரித்த ஏஜி எஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கிறது . ஆனால் அரவிந்த்சாமி இல்லாமல் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாம் . அந்த வகையில் இந்த படத்தில் அவருக்கு பதிலாக எஸ் ஜே சூர்யா மற்றும் பிரசன்னா வில்லன் நடிக்க உள்ளதாக,
தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் இது சரியாக வருமா என்பது கேள்விக்குறி தான் . இருந்தாலும் இயக்குனர் மோகன் ராஜா இதற்கான கதையை வெறித்தனமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறாராம். இந்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது …