இப்போது வரை மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இறப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் சென்னைக்கு வந்த மாரிமுத்து ஆரம்பத்தில் பல முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இதன் பிறகு கண்ணும் கண்ணும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரிமுத்து ,
பின்னர் யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருந்த மாரிமுத்துவுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை . பின்னர் அப்படியே சீரியலுக்கு வந்த மாரிமுத்துவுக்கு ஏகபோக,
வரவேற்பு என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன்னுடைய நடிப்பால் கவர்ந்து விட்டார் நடிகர் மாரிமுத்து . இந்த நேரத்தில் இவர் திடீரென இறந்து போனது ரசிகர்களுக்கு,
மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் மாரிமுத்து இயக்குனராக இருந்தபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…