தமிழ் சினிமாவை கலக்கிவரும் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்கள் நயன்தாரா மற்றும் திரிஷா . இதில் நயன்தாரா ஐயா என்ற படத்தில் மூலம் தன்னுடைய திரையை பயணத்தை தொடங்கினார் . திரிஷா மௌனம் பேசியது என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். மேலும் இருவரும் ஒரே நேரத்தில் தான் தங்களுடைய திரை வாழ்க்கையை தொடங்கினார்கள் .
இதனாலேயே ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது . இன்னும் சொல்லப் போனால் நயன்தாராவுக்கு திருமணமான பிறகு திரிஷாவுக்கு தான் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது . அந்த வகையில் தற்போது நான்கு திரைப்படங்களுக்கு,
மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை திரிஷா . இப்படி சினிமா வாழ்க்கையில் எதிரும் புதிருமாக இருந்து வரும் திரிஷாவும், நயன்தாராவும் ஒரே படத்தில் இணைய உள்ளார்களாம். அந்த வகையில் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் புதிய படம் ஒன்று,
பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது . இந்தப் படத்தில் தான் நயன்தாராவும் திரிஷாவும் இணைந்து பணியாற்ற உள்ளார்களாம் . இதனால் இருவருக்கும் சரிசமமான சம்பளம் கொடுக்க முடிவெடுத்துள்ளாராம் கமல். மேலும் இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கிய படங்களில் ,
திரிஷா நடித்திருந்தார் . ஆனால் மணிரத்னம் படத்தில் நயன்தாரா இதுவரை நடித்ததில்லை . இதனால் இந்த படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி வருகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…