தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கிக் கொண்டு வந்தவர் தான் வைகை புயல் வடிவேலு அவர்கள். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். இப்படி புகழின் உச்சிக்கு சென்றதும் தன்னுடைய வாயால் கெட்டுப் போனார் நடிகர் வடிவேலு. இதனால் பல வருடங்களாக சினிமாவிலிருந்து விலகி இருந்த வடிவேலு ,
சமீபத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் . ஆனால் இந்த படம் இவருக்கு மோசமான வரவேற்பை தான் பெற்றுத்தந்தது . இருந்தாலும் இதை தொடர்ந்து வெளியான மாமன்னன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்று தான் ,
சொல்ல வேண்டும் . இதை அடுத்து தற்போது இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார் வடிவேலு. இப்படி இருக்கும் நிலையில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு வடிவேலு குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அப்போது ,
வடிவேலு செய்த அலப்பறையால் வடிவேலுவுக்கு ஆண்மையே கிடையாது என்று அவருடைய வீட்டை சுற்றிலும் போஸ்டர் அடித்து ஒட்டினார்களாம். இதை காலையில் எழுந்து பார்த்த வடிவேலு அதிர்ச்சியாகி விட்டாராம் . அந்த அளவிற்கு அப்போது மோசமான பத்திரிகைகளும் இருந்தது என்று கூறியிருந்தார்…