தமிழ் சினிமா உலகில் ஒரு சில நடிகர்கள் செய்யும் தவறால் பல பேர் பாதிக்கப்படுகிறார்கள் . அப்படி அவர்கள் செய்த தவறுக்கு தயாரிப்பாளர் சங்கம் எவ்வளவு நடவடிக்கை எடுத்தும் பயனில்லை . இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவை சேர்ந்த நான்கு முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுத்துள்ளதாம் தயாரிப்பாளர் சங்கம் . அந்த வகையில் தமிழ் சினிமாவை சேர்ந்த தனுஷ் ,சிம்பு, விஷால் ,அதர்வா போன்ற ,
நான்கு நடிகர்கள் இனிமேல் நடிக்கவே முடியாதவாறு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் போடப்பட்டுள்ளதாம் . அந்த வகையில் தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வரும் தனுஷ் படப்பிடிப்பில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் , அடிக்கடி படப்பிடிப்பை அவருடைய,
சுயநலத்திற்காக நிறுத்துகிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது . இவரைத் தொடர்ந்து நடிகர் சிம்பு மீது ஏற்கனவே அடுக்கடுக்கான புகார்கள் இருந்து வருகிறது. இவரைத் தொடர்ந்து நடிகர் விஷால் நடிகர் சங்கத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்து வரும் விஷால் தயாரிப்பாளர்,
சங்கத்தின் பணத்தை முறையாக கையாளாத காரணத்திற்காக அவர் மீதும் பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் கடைசியாக உள்ள நடிகர் அதர்வா தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டு படப்பிடிப்பிற்கு போகாமல் டிமிக்கி கொடுத்திருக்கிறார். இப்படி இந்த நான்கு,
நடிகர்களால் தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது மட்டுமில்லாமல் மன உளைச்சலையும் சந்தித்துள்ளனர் இதனால் இவர்களுக்கு திடீரென ரெட் கார்டு கொடுத்தது கோலிவுட் சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது…