May 1, 2024

தம்பி சிவகார்த்திகேயனே கொடுக்கும் போது ..!! அண்ணன் சூரி சும்மா இருப்பாரா ..?? சென்னை மக்களுக்காக சூரி கொடுத்த பெரிய தொகை ..!!

கடந்த வாரம் மிக்ஜாம் புயல் சென்னையையே புரட்டி எடுத்தது என்று தான் சொல்ல வேண்டும் . இந்த புயலால் சென்னையே வெள்ளத்தில் மிதந்தது . இதனால் சென்னை மக்கள் வீட்டை விட்டு கூட வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர் . இந்த நேரத்தில் பல பிரபலங்கள் சென்னை மக்களுக்கு ஆதரவாக களமிறங்கி வேலை செய்தனர் . மேலும் நாளாக நாளாக சென்னை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது .

அது மட்டுமல்லாமல் சென்னை மக்களுக்காக பல சினிமா பிரபலங்கள் வெள்ள நிவாரண நிதி வழங்கி வந்தனர் . அந்த வகையில் சூர்யா ,கார்த்தி, சிவகார்த்திகேயன் ,கலாநிதி மாறன் ,ஹரிஷ் கல்யாண், விஷ்ணு விஷால் போன்ற பல பிரபலங்கள் நிவாரண நிதி கொடுத்த நிலையில்,

தற்போது நடிகர் சூரியும் வெள்ள நிவாரண நிதி கொடுத்திருக்கிறார் . இன்னும் சொல்ல போனால் அவருடைய தம்பி போல இருந்து வரும் சிவகார்த்திகேயனே கொடுக்கும் போது நான் கொடுக்க மாட்டேனா என்று தன்னால் முடிந்த பத்து லட்சத்தை ,

உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியிருக்கிறார் நடிகர் சூரி . மேலும் ஒரு நடிகராக மட்டுமின்றி ஒரு தொழிலதிபராகவும் இந்த நிதி உதவியை சென்னை மக்களுக்காக சூரி  வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *