கடந்த வாரம் மிக்ஜாம் புயல் சென்னையையே புரட்டி எடுத்தது என்று தான் சொல்ல வேண்டும் . இந்த புயலால் சென்னையே வெள்ளத்தில் மிதந்தது . இதனால் சென்னை மக்கள் வீட்டை விட்டு கூட வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர் . இந்த நேரத்தில் பல பிரபலங்கள் சென்னை மக்களுக்கு ஆதரவாக களமிறங்கி வேலை செய்தனர் . மேலும் நாளாக நாளாக சென்னை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது .
அது மட்டுமல்லாமல் சென்னை மக்களுக்காக பல சினிமா பிரபலங்கள் வெள்ள நிவாரண நிதி வழங்கி வந்தனர் . அந்த வகையில் சூர்யா ,கார்த்தி, சிவகார்த்திகேயன் ,கலாநிதி மாறன் ,ஹரிஷ் கல்யாண், விஷ்ணு விஷால் போன்ற பல பிரபலங்கள் நிவாரண நிதி கொடுத்த நிலையில்,
தற்போது நடிகர் சூரியும் வெள்ள நிவாரண நிதி கொடுத்திருக்கிறார் . இன்னும் சொல்ல போனால் அவருடைய தம்பி போல இருந்து வரும் சிவகார்த்திகேயனே கொடுக்கும் போது நான் கொடுக்க மாட்டேனா என்று தன்னால் முடிந்த பத்து லட்சத்தை ,
உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியிருக்கிறார் நடிகர் சூரி . மேலும் ஒரு நடிகராக மட்டுமின்றி ஒரு தொழிலதிபராகவும் இந்த நிதி உதவியை சென்னை மக்களுக்காக சூரி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது…